
அவமானம்
நான் இதயமாய் இருந்தபோது
நீ சுவாசமாய் உள் நுழைந்தாய்..
என்
சிற்றைகள் எல்லாம்
சுற்றிப் பார்த்தாய்,,
உறுதியாய் இருக்கிறதாவென
தட்டிப் பார்த்தாய்
கடைசியில்,
ஒரு
இளம் கலைஞனை விமர்சிக்கும்
பெருமை பிடித்த எழுத்தாளன் பேல
சில அவதா(மா)னங்கள் சொன்னாய்..
அந்த நிமிஷமே
உனக்கு பதில் சொல்ல துடித்தேன்
உதடுகள் துடித்தபோதும்
உள்ளம் தடுத்தது
அதிகாரத்தின் முன்னால்
அவமானப்படுதப்படும்
அப்பாவி மனிதன் போல..
07032010
No comments:
Post a Comment