Tuesday, March 16, 2010

பெண் காதல்


உன் நினைவைச்சுமந்து

உயிர் கசியும் இரவின் தருணங்களில்

ஒரு நிமிஷமேனும்

என் கனவில் வந்து போ...

அந்த சந்தேஷத்தில்

இரவேடு கரைந்து

நானும் இறந்து போகிறேன்

மின்னொளியில் மோதி மோதி

மாய்ந்து போகும் விட்டிய் போல...

நாளை...

உனக்காகவே ஒருத்தி

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு

கால் கடுக்க காத்திருந்தாள் –என்று

தெரிந்தவர்கள் சொல்வார்கள்..

பென் காதல் என்பதால்

நான் உன்னால்

புறக்கணிக்கப்பட்டமை குறித்து

ஒருவரும் அலட்டிக்கொள்ளப் போவதில்லை..


இதுவே,

உன் காதலை

நான் நிராகரித்திருப்பின்

உலகமே சேர்ந்து –என்னை

குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியிருக்கும்..

ஷகீல் 20100315

No comments:

Post a Comment